செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு விதிகளை கைவிடாவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு பென்டகன் மூன்று நாள் அவகாசம் வழங்கியுள்ளது
தங்கள் கிளாட் (Claude) மாதிரியிலுள்ள செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், இல்லையெனில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதோடு பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் கீழ் கட்டாய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், எலோன் மாஸ்க்கின் பாசிசப் போக்குடைய குரோக் AI-ஐ வகைப்படுத்தப்பட்ட இராணுவ வலைப்பின்னல்களில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் அது கையெழுத்திட்டுள்ளது.
